-
Dinamalar
-
மின்கட்டண உயர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது : நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டணம் அமல்?
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. புதிய மின் கட்டண ஆணையில், கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த கட்டண உயர்வு, நாளை (1ம் தேதி) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி ...
-
தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் ராமர் கல் என கூறி விற்பனை
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மடம், சிறு கோயில்களில், தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை, ராமர் கல் என கூறி 500, 1000 ரூபாய்க்கு விற்பனைசெய்வது தொடர்கிறது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பலவகை பவளப்பாறைகள் உள்ளன. கடலில் சாக்கடை, ரசாயனக்கழிவு, வெட்டியெடுப்பது, தடை வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது, பாசி வளர்ப்பது போன்ற காரணங்களால் அழிந்து வரும் பவளப்பாறைகளை பாதுகாக்க, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பவளப்பாறைகளை வெட்டியெடுப்பது, வைத்திருப்பது சட்டவிரோத செயலாக அறிவிக்கப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், ...
-
காமன்வெல்த் விளையாட்டு ஊழல் : சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு
புதுடில்லி : டில்லி காமன்வெல்த் விளையாட்டு தொடர்பான பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. தரமில்லாத மைதானங்கள் கட்டப்பட்டுள்ளது, "டெண்டரில்' திருத்தம் மற்றும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது. ஒரு "டெண்டரில்' நடந்த மோசடி பற்றி விசாரிக்கும்படி சி.பி.ஐ.,க்கு பரிந்துரை செய்துள்ளது.
டில்லியில் வரும் அக்டோபரில் (3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இதற்கான பயிற்சி அரங்கம், நீச்சல் மையம், தடகள பாதை அமைப்பது உள்ளிட்ட 16 திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி ...
-
ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து
புதுடில்லி : புதுச்சேரியில் பா.ம.க.,வும், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும் மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.
ஒரு கட்சியின் மாநில மற்றும் தேசிய கட்சி அந்தஸ்து தொடர வேண்டும் எனில், அந்தக் கட்சி முந்தைய லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும், புதுச்சேரியில் பா.ம.க.,வும் 6 சதவீத ஓட்டுக்களைப் பெறவில்லை. அதனால், உங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என, கேட்டு தேர்தல் கமிஷன் இந்த ...
-
அரசியலில் நுழைய மாட்டேன்: நரேஷ் குப்தா
சென்னை : ""நான் ஒரு சாதாரண ஆள்; அரசியலில் நுழையும் எண்ணம் எனக்கு இல்லை,'' என இன்று ஓய்வு பெற இருக்கும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த நரேஷ் குப்தா இன்று ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக, நிதித்துறை செயலர் பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நரேஷ் குப்தா, தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயர்களை நீக்கவும், சேர்க்கவும் கடந்த 26ம் தேதி வரை 31 லட்சத்து 12 ஆயிரத்து 665 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவை முதலில், ...